search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில்  உள்ளூர் விடுமுறைக்கு பதிலான   வேலை நாள் ஒத்தி வைப்பு   கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறைக்கு பதிலான வேலை நாள் ஒத்தி வைப்பு கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

    • ஓணம் பண்டிகையை முன் னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் 8-ந்தேதி (நேற்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
    • 10-ந்தேதி வேலை நாள் ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    நாகர்கோவில், செப்.9-

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகையை முன் னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் 8-ந்தேதி (நேற்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உள்ளூர் விடு முறைக்கு ஈடாக 10-ந்தேதி குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்று முதலில் அறிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் வருகிற

    10-ந்தேதி வேலை நாள் ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறைக்கு பதிலான வேலை நாள் பின்னர் அறிவிக் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×