search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விழா
    X

    கும்பாபிேசக விழா நடந்த போது எடுத்த படம்.

    குமாரபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிசேக விழா

    • ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 6 மணிக்கு நடந்தது.
    • இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் செல்வ விநாயகர், கல்யாண விநாயகர், செந்தூர் வேலன், ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 6 மணிக்கு நடந்தது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ரக்ஷா பந்தன், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.

    நேற்று விசேஷ சாந்தி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜையும் நடந்தது. 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு செல்வ விநாயகர், எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை 7 மணிக்கு தேச மங்கையர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு நாளை(செவ்வாய்க்கி ழமை) இரவு 7 மணிக்கு செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×