search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கடந்த 3 மாதங்களில் தாய்சேய் இறப்பு ஏதும் இல்லை-  கலெக்டர் தகவல்
    X

    வட்டார அளவில் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களிடையே நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தாய்சேய் இறப்பு ஏதும் இல்லை- கலெக்டர் தகவல்

    • கிராம அளவிலான சமூக காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
    • பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பான மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டசத்து மாத விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.இதில், ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியை அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

    மேலும், வட்டார அளவில் வளரிளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களிடையே நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை கலெக்டர் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஊட்டச்சத்து குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து கிராமங்கள், நகரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறிந்து கவனிக்கவும், வீட்டுத் தோட்டம் அமைக்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதே போல், கிராம அளவிலான சமூக காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

    மேலும், மருத்துவ குழு மூலம் 3மாதத்திற்கு ஒருமுறை மையக் குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும். மிகவும் பலவீனமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடி பணியாளர்களும், கிராமங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 3மாதங்களாக நமது மாவட்டத்தில் தாய்சேய் இறப்பு ஏதுமில்லை.

    மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுத்து, பெண் கல்வியை ஊக்குவித்து, பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பான மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை திருமணம் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக சிறு தானியங்கள், பழ வகைகள், கீரை வகைகள், பிறந்த குழந்தைகள் முதல் 6வயது குழந்தைகள் வரை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டசத்து உணவு உண்பது குறித்து உள்ளுரில் கிடைக்கூடிய உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.கோவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி, வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பிரபாகர், பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், கெலமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    Next Story
    ×