என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் சோலை மரக்காடு அமைக்கும் திட்டம் தொடக்கம்
- காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காகவும் அமைக்கப்படுகிறது
- இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அரவேணு,
பொதுமக்களிடையே காடுகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக சிறு சோலை காடுகள் அமைக்கும் திட்டத்தை கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் செயல்படுத்த இயற்கை ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இதற்கென டெல்லியை சேர்ந்த விஞ்ஞானி சாந்தகுமார், மைசூரைச் சேர்ந்த விஞ்ஞானி சிரிஷா, ஓய்வு பெற்ற வனவர் பாலகிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் பூபதி மற்றும் 5 இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு கல்வி மற்றும் விழிப்புணர்வு உபயோகத்திற்காக ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள அந்நிய தாவரங்கள் மற்றும் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக சோலை மரங்கள், புற்கள், மூங்கில் உள்ளிட்டவற்றை நடவு செய்து சிறு சோலை மரக் காடு அமைக்க உள்ளனர். மேலும் இந்த சோலையை அக்குழுவினர் 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் உள்ளனர். இதன் தொடக்க விழா மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடந்தது. இதில் இயற்கை ஆர்வலர்கள், வனத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டு சோலை மரநாற்றுக்களை நடவு செய்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இந்த குழுவினர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி களுக்கு காடுகள் வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்