என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்; வீடுகளை சூழ்ந்த தண்ணீர்- பயிர்கள் சேதம்
- கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்தனர்.
- 1.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
சீர்காழி:
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைக–ளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழக பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.
கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்தனர். இந்நிலையில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து கொள்ளிட ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கடலை நோக்கி செல்கிறது. கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ஆற்றங்கரை தெரு மற்றும் நாதல்படுகை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
இதேபோல் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, முல்லை, மல்லி, கத்திரிக்காய், வெண்டை, செடிமுருங்கை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். நாதல்படுகை கிரா–மத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தகி சுடாத 60 ஆயிரம் செங்கல் தண்ணீரில் முழுவதுமாக அடி–த்துச் செல்லப்பட்டு விட்டது.மேலும் 20 செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 1.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக மேடான பகுதிக்கு செல்லுமாறு சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று வலியுறுத்தினர்.
மேலும் வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழும் பட்சத்தில் மக்களை வெளியேற்றி உணவளிக்கும் வகையில் முகாம்கள் அமைத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாதல் படுகை கிராமத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் படகின் மூலம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்