என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்களை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது புகார்
- இளம்பெண் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகி விட்டார்.
- முரளி (23) என்ற வாலிபர்தான் தங்களது மகளை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பூர் மாவட்டம் திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் 16 வயது மகளுடன் ஓசூர் பகுதியில் தங்கி மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ள இளம்பெண்ணின் தந்தை ஓசூர் அருகேயுள்ள பாகலூரை சேர்ந்த நந்து (வயது 20) என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஓசூரை அடுத்த அக்காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 15-ந்தேதி முதல் காணாமல் போய்விட்டார்.இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ள பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த முரளி (23) என்ற வாலிபர்தான் தங்களது மகளை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம் பெண்ணையும் கடத்திச்சென்றதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்