search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை
    X

    கோப்பு படம்

    சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இந்த வழக்கில் வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35).இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இது குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.மேலும் இவர் மீது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி சரண் விசாரித்தார்.அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

    இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.அதில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு போச்சோ சட்டத்தின் கீழ் (பலாத்காரம்) 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும்,இந்திய தண்டனைச் சட்டம் 363ன் கீழ் (கடத்தல்) 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×