search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர பரிசோதனை
    X

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர பரிசோதனை

    டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர பரிசோதனை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அதை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வ லர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுக ளுக்கும் நேரடியாகச் சென்றனர். வீடுகளில் உள்ள முதியவர்கள், பா லூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோ தனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் .மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வைத்துக் கொள்ள வேண்டு ம். தண்ணீர் உள்ள பாத்திரங்கள், மண் பாண்டங்களை திறந்து வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மனிதர்களை நோய் தாக்காமல் இருப்ப தற்கு நாம் எவ்வாறு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினர். மேலும் கீரை காய்கறிகள் போன்ற சத்தானவற்றை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரி வித்தனர்.

    Next Story
    ×