என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பலி
- கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், லிங்கமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பிரகாஷ், அதே பகுதியில் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில், நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, பிரகாஷ் குடிபோதையில் இருந்ததால், நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளார். உடலை கைப்பற்றி அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






