search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    வேலாயுதம்பாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    • வேலாயுதம்பாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மசக்கவுண்டன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 44) .இவர் தீராத உடல் வலியால் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் வலி தீர வில்லை. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வளர்மதி தனக்கு உடம்பு வலிப்பதாக தனது மகன் பூபதியிடம் கூறியுள்ளார். அதற்கு பூபதி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    பிறகு எழுந்து அவரது அம்மாவை பார்த்த போது அம்மா வளர்மதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வளர்மதி அருகில் குருணை மருந்து டப்பா இருந்துள்ளதை பார்த்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பூபதி வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






    Next Story
    ×