என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளித்தலையில் மனைவி மாயம்; கணவர் போலீசில் புகார்
- குளித்தலையில் மனைவி மாயமானதால் கணவர் போலீசில் புகார் கொடுத்தார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
குளித்தலை அடுத்த தொண்டமாங்கிணம் பஞ்., குமரக்கவுண்டனூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 25) லாரி டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு த்ரிஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரி உப்பிடமங்கலத்தில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் ரத்தப்பரிசோதனை செய்ய சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து குணசேகரன் தனது மனைவியை காணவில்லை என சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






