search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்
    X

    தமிழ்நாடு நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்

    • தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட உள்ளது
    • போட்டியில் கலந்து கொள்ள கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு விடுத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை 18-ம் தேதி "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இப்போட்டியில்முதன்மைக் கல்வி அலுவலரால்தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதற்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×