என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை
- தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள லிங்கத்தூரைச் சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 39). இளநீர் வியாபாரி. கடந்த சில ஆண்டுகளாக இளநீர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முருகானந்தம் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் உறவினர்கள் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகானந்தம் இறந்தார். இதுகுறித்து உறவினர்கள் புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






