என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலையில் மக்கள் நீதி மன்றம்
    X

    குளித்தலையில் மக்கள் நீதி மன்றம்

    • குளித்தலையில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது
    • சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி தலைமையில் நடைபெற்றது

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கூடுதல் முதன்மை நீதிபதியும், குற்றவியல் நடுவர் நீதிபதியுமான பிரகதீஸ்வரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.எஸ்.எம்.சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசோலை வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் என 34 வழக்குகளுக்கு ஒரு கோடியே ரூ.96 லட்சம் தீர்வு காணப்பட்டது.

    இதில் வாகன விபத்தில் கணவனை இழந்த மலர்விழிக்கு குளித்தலை வழக்கறிஞர் கார்த்திகேயன் திருச்சி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன வாகன விபத்து இழப்பீடாக ரூ.55 லட்சம் பெற்றுக் கொடுத்தார். இதற்கான உத்தரவை சார்பு நீதிபதி மன்ற நீதிபதி சண்முகக்கனி வழங்கினார். திருச்சி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட மேலாளர் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திக், செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞர் குளித்தலை நாகராஜன், நிக்கில்அர்விந்த், ராஜகோபால், மணிவேல் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள், சட்டப் பணிகள் குழு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×