என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுக்கி விழுந்த டிரைவர் பலி
- கரூரில் தடுக்கி விழுந்த டிரைவர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்துள்ள தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விமலக்கண்ணன் (வயது 42). தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வந்த இவர், வீட்டின் அருகில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றுள்ளார. செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






