search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்ற 10 பேர் கைது
    X

    சட்ட விரோதமாக மது விற்ற 10 பேர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • சட்ட விரோதமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்

    கரூர்

    கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சட்டம் ஒழுங்கு போலீசார், தோகமலை, பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக ரங்கராஜ் (வயது 54), காமராஜ் (60), தங்கராசு (55), தங்கதுரை (45), ராஜா (35), மலர்விழி, (52), பிரியா (40), நிதிஷ்குமார் (22), கருப்பையன் (45), பெரியக்காக (65) ஆகிய, 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


    Next Story
    ×