என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
- வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுத்திருக்காம்புலியூரை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் சிவா (வயது 20). இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாக இருந்ததால் சிவா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். பின்னர் ராஜலிங்கம் மகன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த சிவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






