என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் விஷம் தின்று தற்கொலை
    X

    வாலிபர் விஷம் தின்று தற்கொலை

    • வாலிபர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி புரசம்பட்டி காலனியை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகன் சசிகுமார் (வயது 38). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் கடந்த 14-ந்தேதியன்று சசிகுமார் எலி மருந்து (விஷம்) தின்றார். இதனால் அலறி துடித்த அவரை மனைவி பானுப்பிரியா மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பானுப்பிரியா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் வாலிபர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×