search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
    X

    வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

    • கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ௩ நாட்கள் சிறப்பு ரயில் கரூர் வழியாக இயக்கப்படுகிறது

    கரூர்,

    தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை, வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வரும், 27, செப்டம்பர் 1, 6ம் தேதிகளில் வாஸ்கோட காமாவில் இருந்து இரவு, 9:51 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:50 வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரயில் வரும், 28, செப்., 2 மற்றும் 7ல் மாலை, 6:58 மணிக்கு கரூர் வந்து இரவு, 7:00 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப் பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில், வேளாங்கண்ணியில் இருந்து வரும், 30, செப்டம்பர் 4, 9 மதியம், 1:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 8:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். இந்த ரயில் கரூருக்கு வரும், 30 மற்றும் செப்., 4, 9 ல் இரவு, 7:48 மணிக்கு வந்து, 7:50 மணிக்கு, வாஸ்கோடகாமா புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×