search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
    X

    முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    • 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு சஷ்டியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், பவித்திரம், பாலமலை, வெண்ணெய்மலை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு, சஷ்டியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் பாலமலை பாலசுப்பி ரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபி ஷேகம் நடந்தது.

    Next Story
    ×