என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முனியப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    முனியப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

    • முனியப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
    • ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நடைபெற்றது

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரையில் முனியப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .அதேபோல் அருகாமையில் உள்ள முனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு முனியப்பசாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×