search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
    X

    சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

    • சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில்

    கரூர்:

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "சமூக நீதி நாள் உறுதிமொழி" சமூக இடைவெளியை கடைபிடித்து எடுக்கப்பட்டது.

    பெரியார் பிறந்த நாளையொட்டி கடந்த வாரம் சனிக்கிழமை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதுசமயம், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் மற்றும் சமூக நீதியை அடித்தளமாளகக் கொண்டு சமுதாயம் அமைக்கும் நமது பயனாம் தொடர உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில், பொது மேலாளர் சுரேஷ் (மனிதவளம்), துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலைமேலாளர் சிவக்குமார் (மனிதவளம்) மற்றும் மேலாளர்- மனிதவளம் மணிகண்டன்

    (சட்டம்) ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×