search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் பள்ளி மாணவன் பலி
    X

    கரூரில் பள்ளி மாணவன் பலி

    • வேன் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலி
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ராஜா (39). இவரின் மகன் லாபியரசு (13). இவர் அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு படித்து வந்தார். ராஜா தனது மகன் லாபியரசுடன், திண்டுக்கல்-கரூர் சாலை வாங்கலைபுதுார் பகுதியில், வேனில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆனந்து (30) ஓட்டி வந்த, ஆம்னி பஸ், வேன் மீது மோதியது. அதில், வேனில் பயணம் செய்த லாபியரசு, தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×