என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்
- குளித்தலையில் வீட்டில் இருந்த பள்ளி மாணவி மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, மாயனுார், கீழ மாயனூரை சேர்ந்த, 'சென்ட்ரிங்' தொழிலாளியின், 16 வயது மகள், அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 28ந்தேதி இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வருகின்றனர்.
Next Story






