என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகள் புதுப்பிக்கும் பணி
    X

    சாலைகள் புதுப்பிக்கும் பணி

    • அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் ரூ.7 கோடி செலவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது
    • இளங்கோ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கரூர்,

    அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் முதல்- அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மூலமாக தார்சாலை அமைக்க ரூ. 7 கோடியே 3 லட்சத்து 30 ஆயிரம் நிதியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். இதனைதொடர்ந்து அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ கலந்து கொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மலைக்கோவிலூர் முதல் நந்தனூர் வரை ரூ.1 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும், ஈசநத்தம் ரோடு முதல் சின்னகரியாம் பட்டி வரை ரூ.1 கோடியே 60 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலும், கொக்காட்டிபட்டி முதல் பால்வார்பட்டி, கணக்கு வேலன்பட்டி, பெரியவளையபட்டி வரை ரூ.1 கோடியே 71 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், வேலன் செட்டியூர் முதல் அஞ்சாகவுண்டன்பட்டி வரை ரூ.1 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தார் சாலை பணிகள் தொடங்கின. இந்தநிகழ்ச்சியில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×