என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ விழா
- வேலாயுதம் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டு ப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில், மற்றும் புன்னம் சத்திரம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், ஆகிய கோவில்க ளில் ஆனி மாத தேய்பிறை கடைசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியை வழிப்பட்டனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






