என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாயம்
    X

    பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாயம்

    • அரசு பாலிடெக்னிக் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி மாயம்
    • மாயனுார் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்

    கரூர்,

    திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் அடுத்த, காக்காயன் சேர்ந்தவர் கருப்பையா (வயது 53) டிரைவர். இவரது மகள் நாகஜோதி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், இ.சி.இ., இரண்டாமாண்டு, விடுதியில் தங்கி படித்து வந்தார். தனது மகளை பார்ப்பதற்காக கல்லுாரி விடுதியில் சென்று கேட்ட போது, விடுதி காப்பாளர், 'உங்கள் மகள் தங்கை வீட்டிற்கு செல்வதாக, கூறி சென்று விட்டார்' என தெரிவித்துள்ளார். மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த கருப்பையா, மாயனுார் போலீசில் புகாரளித்தார். அதன்படி, மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×