என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி
- கார் விபத்தில் மூதாட்டி பலியானார்
- ஏற்கனவே இருவர் மரணமடைந்த நிலையில் தற்போது மூதாட்டியும் உயிரிழந்துள்ளார்
கரூர்,
கரூர், திருப்பதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). இவர் கரூரில் இருந்து ஹூண்டாய் காரில், தாய் மோகனா (வயது 65), அக்கா மகள் தருண், ஆகியோருடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். க.பரமத்தி அருகே, ரங்கநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருப்பூரில் இருந்து, கரூர் நோக்கி சென்ற தனியார் பஸ், கார் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே ராம்குமார், தருண் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மோகனா, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






