search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணராயபுரம் அருகே முதியவர் மர்ம சாவு
    X

    கிருஷ்ணராயபுரம் அருகே முதியவர் மர்ம சாவு

    • கிருஷ்ணராயபுரம் அருகே முதியவர் மர்மமுறையில் இறந்தார்
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் குளத்து வாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவர் யார?் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் அம்மையப்ப கவுண்டர் (வயது 88) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடப்பது அம்மையப்ப கவுண்டர் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×