search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய மக்கள் நீதிமன்றம்
    X

    தேசிய மக்கள் நீதிமன்றம்

    • தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தேசிய சட்டப்பணிகள் மற் றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவி பேரில் நாடு முழுதும் வரும் 12 -ந் தேதி தேசிய மக்கள் நீதி மன்றம் கருர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத் துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித் தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரி வித்து பயனடைமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன்களும், ஏனைய பிரச்னைகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்துக்கள். காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் நுகர்வோர் வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், 11ம்தேதி வரை பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்த நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்த நீதிமன்ற அமர்வு கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந் துள்ள கூட்டரங்கில் பிற்பகல் 3.30மணி முதல் 5.30மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக் கப்படுகிறது. எனவே, வழக் காடிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள கேட் டுக்கொள்ளப்படுகிறது. சந்தேகம் இருப்பின், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொலைபேசி எண் 04324 296570ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×