என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஆய்வு
- தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஆய்வு செய்தனர்
- தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் காவிரி ஆறு செல்கிறது. ஆற்றில் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை பாதுகாக்கும் வகையில், அந்த பகுதியை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். மாயனூர் கதவணை, காவிரி ஆற்று படுகை பகுதிகள், அதிகம் தண்ணீர் செல்லும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






