search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    கரூர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • கரூர் வள்ளுவர் அறிவியல், மேலாண்மை கல்லூரியல் புரிந்துணர்வு ஒப்பந்த விழா நடைபெற்றது
    • மும்பை நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    கரூர்,

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் கடந்த 12 வருடங்களாக பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளோமா படிப்புக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த டிப்ளோமா படிப்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் ஸ்பைனாட் மும்பை மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற்று நடத்தபடுகிறது. இதுவரை இக்கல்லூரியில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களை இந்த படிப்பில் தேர்ச்சிபெற செய்து வங்கி பணியையும் பெற்றுத் தந்துள்ளது.இந்த மண்டலத்தில் வேறு எந்த கல்லூரியிலும் இந்த படிப்பு வழங்கபடுவதில்லை. எனவே இந்த படிப்புக்காகவே ஏராளமான மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். மேற்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கும் நிகழ்வு கல்லூரியின் வள்ளலார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இருளப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி செயலர் ராகவி தலைமை உரையாற்றினார்.கரூர் வைஸ்யா வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துறை பொதுமேலாளர் சேகர் வாழ்த்துரை வழங்கினார். இதில் மும்பை இந்தியன் இன்ஸ்டிலைட் ஆப் பேங்கிங் அண்டு பைனான்ஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சிறப்புரையாற்றினார். பேங்கிங் அண்டு பைனான்ஸ் டிப்ளோமா படிப்புக்கு கல்லூரி சிறந்த பயிற்சி அளித்து நல்ல முறையில் பணியாற்றி வருவதாக பாராட்டி பேசினார்.விழாவில் கல்லூரி தலைவர் செங்குட்டுவன், செயலர் ஹேமலதா செங்குட்டுவன் மற்றும் திரளான ஆசிரியர்கள் வங்கி அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த டிப்ளோமா படிப்பில் புதிதாக சேர பல மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

    Next Story
    ×