என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கறிக்கடைக்காரருக்கு ஆயுள் சிறை
- கறிக்கடைக்காரருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
- விவசாயி கொலை வழக்கில்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). விவசாயியான இவர், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59). கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஆடு விற்பனை செய்வதாகக் கூறி சரவணன் மாரியப்பனிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரவணனிடம் சென்று மாரியப்பன் ஆடுகளை கேட்டுள்ளார். அதற்கு பணமாக கொடுத்து விடுவதாக சரவணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இதில் சரவணணை ஆடு வெட்டும் கத்தியால் மாரியப்பன் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணன் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாரியப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை ெசலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மாரியப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்