என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி
- மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
வேலாயுதம்பாளையம்,
கன்னியாகுமரி மாவட்டம் தோவானை அருகே வீரன்குளம் பகுதி சேர்ந்தவர் பரசுராமன் (45). இவரின் மனைவி ஜெயலட்சுமி (38). இவர்களுக்கு கணேஷ் (15) என்ற மகன் உள்ளார். இந்நிலையில். இருவரும் தற்பொழுது கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள லட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். பரசுராமன் காகித ஆலை கேண்டீன் மற்றும் உள்ளூர் பகுதிகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரசுராமன் வீட்டில் இருந்த மின்விசிறியை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பரசுராமன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அங்கு வந்த அருகாமையில் உள்ளவர்கள் பார்த்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரசுராமனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெயலட்சுமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






