என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
    X

    டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

    • டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்
    • சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, நெய்தலுார், கோட் டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 25). விவசாய கூலி தொழிலாளி. இவர், தனக்கு சொந்த மான, டூவீலரில், வீரப்பூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொசூர்-வீரப்பூர் நெடுஞ்சாலை, குள்ளரங் கன்பட்டி அருகே, எதிரே அதிவேகமாக வந்த, சரக்கு வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில், கோவிந்தராஜிக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிந்தாமணிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×