என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி குளித்தலை கோவிலில் குத்துவிளக்கு பூஜை
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி குளித்தலை கோவிலில் குத்துவிளக்கு பூஜை

    • குளித்தலை கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், கடம்பவனேஸ்வரர் ஆகிய கோவிலில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பூரணம் குணம் பெற வேண்டி 108 பெண்கள் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில், முன்னால் நகர் மன்ற தலைவரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பல்லவிராஜா, கரூர் மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூரியனூர் சந்திரன், கரூர் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் வாலாந்தூர் பழனிச்சாமி, குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, இரணியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், அரசு வழக்கறிஞர் சாகுல் அமீது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர துணை செயலாளர் கே எம் செந்தில்குமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×