search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
    X

    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூரில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் தனியரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அடுத்த ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும். தி.மு.க. அரசு பதவியேற்று 15 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி, சட்டம் ஒழுங்கையும் சிறப்புடன் பாதுகாத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது,

    மத்திய அரசின் புதிய வணிக கொள்கை சில்லறை வியாபாரத்தை ஒழித்து கார்ப்பரேட் பெருவணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் முறையை கைவிட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு சலுகையும், ஊக்கமும் தந்து அவர்களை பாதுகாத்திட மத்திய அரசை கேட்டுக்கொள்வது, நாட்டில் பெருகிவரும் மது, கஞ்சா போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழித்து ஒழுக்கமும், ஆரோக்கியமும் நிலை பெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அருள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்."

    Next Story
    ×