search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
    X

    கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

    • கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசர்(வயது39) கரூர் தான்தோன்றி மலை டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ராயனூரை சேர்ந்த குடியரசு (22) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் குடியரசை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(20). இவர் கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தபோது கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் (28) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதுகுறித்து விசாரித்த கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா(33) கரூர் அருகம்பாளையம் டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் கார்த்திக்(32) அவரிடம் இருந்த பர்சை திருடி சென்றார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன்(23) மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது கரூர் மாவடியான் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(23) அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×