என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் சிரட்டை விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    தேங்காய் சிரட்டை விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

    • நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.
    • தேங்காய் விளைந்தவுடன் பறித்து தேங்காய் பருப்பு எடுத்த பின் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கரூர் :

    கரூர் நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து தேங்காய் பருப்பு எடுத்த பின் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் உண்டியல், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.9-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×