என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
    X

    மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

    • குருணை மருந்தை சாப்பிட்டவர் பலி
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர்,இனுங்கூரில் மனைவி இறந்த துக்கத் தில் குருணை மருந்து சாப்பிட்டவர் பலியானார்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தர்மலிங்கம் (வயது 65). இவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனதால், மனநலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த தர்மலிங்கம் கடந்த 28ம் தேதி அன்று யாரும் இல்லாத நேரத்தில் குருணை மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை அழைத்துக்கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரின் மகன் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×