search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்
    X

    வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்

    • வேலாயுதம்பாளையம் காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து பொருட்கள் நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வசித்து வருபவர் சந்திரசேகர்.இவரது மனைவி விஜயா. இவர்கள் வீட்டில் திடீரென வீட்டுக்குள் மின் கசிவால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதை பார்த்த சந்திரசேகர் மனைவி விஜயா அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து விஜயா வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் வீட்டுக்குள் இருந்த சமையல் பொருட்கள் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் எரிந்து நாசமாயின.

    Next Story
    ×