search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு இலவசபயிற்சி
    X

    இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு இலவசபயிற்சி

    • இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு இலவசபயிற்சி வகுப்பு நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்

    கரூர்:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் காகித நிறுவன மனிதவள அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, காகித நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான இரண்டு மாத காலங்கள், தமிழ்நாடு அரசு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வகுப்புகளில் ஆலை வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த 50 பேர் பயிற்சியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் அனைவருக்கும் உணவு, தேநீர், பால் மற்றும் சத்துணவுகள் வழங்கப்படும் மேலும், உடல் தகுதித்திறன் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்தும் சுல்வி வல்லுனர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் கொண்டு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர், ஆசிரியை பெருமக்களை பாராட்டும்வி தமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×