என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூரில் மே 1-ந் தேதி முதல் இலவச கோடைகால பயிற்சி முகாம்
- கரூரில் மே 1-ந் தேதி முதல் இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
- முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை, அலுவலக வேலை நேரங்களில் நேரடியாகவோ அல்லது இ.மெயில் அல்லது தொலைபேசி வாயிலாக பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் மே 1 முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மல்யுத்தம் மற்றும் ஜூடோ விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள், விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை, அலுவலக வேலை நேரங்களில் நேரடியாகவோ அல்லது இ.மெயில் அல்லது தொலைபேசி வாயிலாக பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






