என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீன் விற்பனை மும்முரம்
- மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரமாக நடைபெற்றது
- ஜிலேபி கிலோ 130 ரூபாய், கெண்டை 110 விற்பனை செய்யப்பட்டது.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரிநீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது.இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள்பிடித்துவந்து, கதவணை அருகே செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஜிலேபி, கெண்டை மீன்கள் அதிகளவில் கிடைத்து வருகிறது. இதில் ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை மீன் கிலோ, 110 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.கரூர், புலியூர், சேங்கல், மணவாசி,திருக்காம்புலியூர், லாலாப்பேட்டைஆகிய பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
Next Story






