search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூக்கணாங் குறிச்சியில்  மாடுகள் மாலை தாண்டும் விழா
    X

    மூக்கணாங் குறிச்சியில் மாடுகள் மாலை தாண்டும் விழா

    • மூக்கணாங் குறிச்சியில் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
    • மாடுகளுக்கு எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் அருகேயுள்ள மூக்கணாங்குறிச்சியை அடுத்த தொட்டியப்ப ட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் திருவிழாவும், மாடுகள் மாலை தாண் டும் விழாவும் நடைபெறும். கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாத நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

    3ம் நாளான நேற்று எருது ஓட்டம் எனப்படும் மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதில் கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகள் அழைத்து வரப்பெற்றிருந்தன. வழிபாட்டுக்கு பிறகு சுமார் 3 கி.மீட்டர் தூரம் எருதுகளை ஓட்டி சென்று அங்கிருந்து மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. முதல் 3 இடங்களை பெற்ற மாடுகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சை பழம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×