என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாங்கல் அருகே விவசாயி தற்கொலை
    X

    வாங்கல் அருகே விவசாயி தற்கொலை

    • வாங்கல் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மேலசக்கரபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது61). விவசாயியான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன் தவறி விழுந்து இவரின் இடது கையில் காயம் ஏற்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கந்தசாமி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். பின்னர் உறவினர்கள் இவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×