என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி தீக்குளித்து தற்கொலை
- விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர்,
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் வையாபுரி (வயது 77), விவசாயி. இவர் வயது முதிர்வின் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வையாபுரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வையாபுரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






