என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் மேம்பாட்டு பணிகள்
    X

    கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் மேம்பாட்டு பணிகள்

    • ரூ.10 கோடி செலவில் சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரையிலான சாலை மேம்பாட்டு பணிகள்
    • 4.5 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டம்

    கரூர், ஜூன்.26-

    கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் வகையில், சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு சாலை உள்ளது. இந்த சாலையில், கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சுற்றுலா மாளிகை, அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகியவை அமைந்துள்ளன.கரூர்-திருச்சி புறவழிச்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு கரூர் சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை இச்சாலை, மையத்தடுப்புடன் கூடிய 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் முக்கிய அலுவலகங்கள் உள்ள இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில் சுங்கவாயில் முதல் வெங்கக்கல் பட்டி வரை 4.5 கி.மீட்டர் தொலைவுக்கு சாலையை ரூ.10 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.சுங்கவாயில் முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலையில் இருக்கும் இடவசதியை பொறுத்து சாக்கடை வடிகால் வசதியுடன் சாலை மேம்படுத்தப்படும். மேலும் வடிகாலுக்கும், சாலைக்கும் இடையே உள்ள இடைவெளியில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.10 கோடியில் முன்மொழிவு அனுப்பப்ட்டு, சாலையை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×