என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலதிபர்களுடன் ஆலோசனை
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன திட்டம் பயன் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடைபெற்றது
- ரூ.4.00 கோடிக்கான கடன் அனுமதி
கரூர்,
யூகோ வங்கிகடந்த 30-ம் தேதி அன்று, கரூர் மாநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சென்றடைதல் திட்டத்தை நடத்தியது.இக்கூட்டத்தில் யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர்ஜி.ஜோதிஷ் மற்றும் யூகோ வங்கியின் கோவை எஸ்எம்இ-ஹப் தலைவர் ராம் பிரகாஷ் மிஸ்ரா, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.எஸ் சங்கரலிங்கம் மற்றும் கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அன்போலி ஆர். காளியப்பன் மற்றும் ஸ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தின் தலைமை வழிகாட்டியான, பி.அசோக் சங்கர், இயக்குநர் கிசின் டெக் ஆகியோர் கலந்து கொண்டனர்.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியில் வங்கியின் பங்கு பற்றி பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினர்.ஏற்றுமதி துறை தொழில் முனைவோர் மற்றும் யூகோ வங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். கிளை மேலாளர்கே.வினோத் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரிவுகளுக்கு இருக்கும் பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கினார். பங்கேற்பாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.மண்டல மேலாளர்ஜி.ஜோதிஷ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4.00 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார்.






