என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலியல் புகாரில் 3 வாலிபர்கள் மீது வழக்கு
- தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- பாலியல் புகாரில் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கரூர்:
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் பிரதீப் (வயது 23) கட்டிட தொழிலாளியான இவர், தனது நண்பர்களான சதீஷ்குமார், ஹரி பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் உள்ளிட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






